அறிவுறுத்தப்படுகின்றனர்.
- பாடசாலை வாயிலில் சகல மாணவர்களினதும் புத்தப்பைகள் ஆசிரியர்களால் சோதிக்கப்படும். ஆகவே பாடசாலைக்கு வரும் போது அநாவசியமான, சந்தேகத்திற்கு இடமான மேலதிகமான பொருட்கள் எதனையும் கொண்டு வர வேண்டாம்.
- பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தும் கழுத்துப்பட்டி, சின்னம் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அணியாதவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- உயர்தர மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை கண்டிப்பாக பாடசாலைக்கு கொண்டுவருதல் வேண்டும்.
- பாடசாலையின் சகல வாயில்களும் சரியாக 7.30 மணிக்கு மூடப்படும், அதன்பின் எந்த மாணவர்களும், ஆசிரியர்களும் உட்செல்லவும், வெளிச்செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மீண்டும் 1.30 மணிக்கே வாயில்கள் திறக்கப்படும்.
- பெற்றோர், பாதுகாவலர், உறவினர்கள் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- 7.30 மணிக்கு பின்னர் பாடசாலைக்குள் நுழைய விரும்பும் பெற்றோர் வாசலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் குறித்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றபின்னரே வாயில் திறக்கப்படும். அப்போதும் எவ்வித பயணப்பொதிகளுடனும் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- பெற்றோர் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் பெற்றோர் குறித்த நேரத்திற்குள் வருகை தர வேண்டும். பின்னர் வாயில் கதவு திறக்கப்பட மாட்டாது. அப்போதும் எவ்வித பயண பொதிகளும் யாருடனும் அனுமதிக்கப்படாது.
- ஆரம்பபிரிவு மாணவர்களை அழைத்துச்செல்லும் பெற்றோர் , தாமதங்களை தவிர்த்து உரிய நேரத்திற்கு அழைத்துச்செல்லவும்.
- பாடசாலையினுள் சந்தேகத்திற்கு இடமான பொருட்களையோ நபர்களையோ கண்டால் உரிய ஆசிரியர்களிடம் அறியத்தருவது மாணவர்களின் கடமையாகும்.
- மறு அறிவித்தல் வரை, பாடசாலையில் நடைபெறும் மேலதிக வகுப்புக்கள், விளையாட்டு பயிற்சிகள் போன்றவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பாடசாலை நிறைவடைந்தாலும் மாலை நேர விளையாட்டுக்களில் பாடசாலை மைதானத்தினுள் விளையாடுவது ,நுழைவது அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.
- இந்த அறிவுறுத்தல்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை நிர்வாகம் அனைவரையும் கோருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக